சிறுநீரக கல்லும் அதை சரிசெய்யும் சில வழிமுறைகளும்
சிறுநீரக கல்லும் அதை சரிசெய்யும் சில வழிமுறைகளும்
சிறுநீரக கல் ஏன் உருவாகிறது என்று முதலில் பார்ப்போம்:
1. தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது
2. சிறுநீரை நீண்ட நேரம் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது
3. அதிக அளவு கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை அருந்துவது
4. உப்புகள் அதிகம் இருக்கும் நீரை அருந்துவது
5. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் அதிகமாக ஏற்படுவது
6. அதிகளவு இறைச்சி உணவை உண்டு எந்த வேலையும் செய்யாமல் இருப்பது
சிறுநீரக கற்களின் வகைகள்:
1. கால்சியம் stones
2. யூரிக் ஆசிட் stone
3 சிஸ்டைன் stones
இந்த மூன்று வகைகள் அதிகமாக காணப்படுகிறது
இந்தக் கற்கள் சிறுநீரகம் சிறுநீரக் குழாய் சிறுநீர்ப்பை போன்ற இடத்தில் திடப்பொருளாக தோன்றி பெரிய வலியை உருவாக்குகிறது
கற்களானது 3 மில்லிமீட்டர் அளவிலிருந்து வலி ஆரம்பிக்கும்.
சிறுநீர் பையில் இருந்தால் சில நேரத்தில் வலியில்லாமல் சிறுநீரை வெளியே விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்.
சிறுநீரக்கல் இருப்பதற்கான அறிகுறிகள்:
1.கல்லானது சிறுநீரகத்தில் இருந்தால் முதுகு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
2. சிறுநீர் குழாய், சிறுநீர்பை இருந்தால் இடுப்பு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்படும்.
3. கல்லின் அளவு பெரிதாக இருந்தால் வாந்தி ஏற்படும்.
4. சிறுநீர் வருவது போல் தோன்றும் ஆனால் கழிக்கும்போது சிறிய அளவு மட்டும் வரும்.
5. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
6. திடீர் எடை குறைதல், பசியின்மை, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.
சிறுநீரக கல்லை சரி செய்யும் சில வழிமுறைகள் :
1.) 9எழுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி நீர் சேர்க்காமல் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அரைமணி நேரம் எந்த உணவும் உண்ணக்கூடாது. அரை மணி நேரம் கழித்து அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனை ஒன்பது நாட்களுக்கு செய்ய வேண்டும். கல்லின் அளவைப் பொறுத்து கரையும் நட் கள் அதிகரிக்கும்.சிறுநீர் பையில் இருந்தால் நிச்சயம் ஓரிரு நாளில் கரைந்துவிடும்.
2.) சிறுகண் பீளை நிரந்தர தீர்வாகும். இந்தச் செடியின் பூ, இலையில் உள்ள மொத்த ஆற்றலும் இதன் வேரில் அடங்கியுள்ளது. எனவே இதன் வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நன்றாக நசுக்கி100 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு சூடு படுத்தி வடிகட்டி ஆறவைத்து காலையில் வெறும் வைற்றில் குடித்து வரவேண்டும். இதன் பூ இலை ஆகியவற்றை பச்சையாக எடுத்து நன்றாக நசுக்கி சாறு பிழிந்து சிறிதளவு தண்ணீருடன் காலை மாலை என இருவேளை குடித்து வர வேண்டும்.
3.) வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உடையது. எனவே காய் காய்த்த வெட்டக் கூடிய நிலையில் உள்ள மரத்தினை வெட்டிய பிறகு தூர் பகுதியில் வாழை மரத்தின் நடுவில் உள்ள தண்டு பகுதியில் பள்ளம் ஒன்று தோண்ட வேண்டும். அந்தப் பள்ளத்தில் உருவாகும் நீரை சேகரித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
4.) சிறுநீரில் கல் வெளியேறும் போது பயங்கர வலி ஏற்படும். எனவே பயப்பட வேண்டாம்.
5.) நீர்க்கடுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6.) அதிக அளவு மக்னீசியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் இது கல் கரைய உதவும்.
7.) மேலே கூறப்பட்ட முதல் இரண்டு முறைகளில் ஒன்றை குறைந்தது ஏழு நாட்களுக்கு செய்ய வேண்டும் அப்போதுதான் பலன் கிடைக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. தக்காளி மற்றும் தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. மது ,புகைபிடித்தல் தவிர்க்க வேண்டும்
3. இறைச்சி உணவுகளை குறைந்த அளவு உண்ண வேண்டும்.
4. முட்டை , பால், பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
5. இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் இவை அதிக யூரிக் ஆசிட் ஏற்படுத்தும்.
6. எண்ணையில் பொறித்த உருளைக்கிழங்கு , மீன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்
7. சீனியை உணவில் சேர்க்கக்கூடாது.
8. அதிக oxalate உணவுகளை தவிர்க்க வேண்டும்.
9. கிருமி தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்
சிறுநீரக கல் ஏன் உருவாகிறது என்று முதலில் பார்ப்போம்:
1. தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது
2. சிறுநீரை நீண்ட நேரம் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது
3. அதிக அளவு கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை அருந்துவது
4. உப்புகள் அதிகம் இருக்கும் நீரை அருந்துவது
5. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் அதிகமாக ஏற்படுவது
6. அதிகளவு இறைச்சி உணவை உண்டு எந்த வேலையும் செய்யாமல் இருப்பது
சிறுநீரக கற்களின் வகைகள்:
1. கால்சியம் stones
2. யூரிக் ஆசிட் stone
3 சிஸ்டைன் stones
இந்த மூன்று வகைகள் அதிகமாக காணப்படுகிறது
இந்தக் கற்கள் சிறுநீரகம் சிறுநீரக் குழாய் சிறுநீர்ப்பை போன்ற இடத்தில் திடப்பொருளாக தோன்றி பெரிய வலியை உருவாக்குகிறது
கற்களானது 3 மில்லிமீட்டர் அளவிலிருந்து வலி ஆரம்பிக்கும்.
சிறுநீர் பையில் இருந்தால் சில நேரத்தில் வலியில்லாமல் சிறுநீரை வெளியே விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும்.
சிறுநீரக்கல் இருப்பதற்கான அறிகுறிகள்:
1.கல்லானது சிறுநீரகத்தில் இருந்தால் முதுகு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
2. சிறுநீர் குழாய், சிறுநீர்பை இருந்தால் இடுப்பு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்படும்.
3. கல்லின் அளவு பெரிதாக இருந்தால் வாந்தி ஏற்படும்.
4. சிறுநீர் வருவது போல் தோன்றும் ஆனால் கழிக்கும்போது சிறிய அளவு மட்டும் வரும்.
5. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
6. திடீர் எடை குறைதல், பசியின்மை, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.
சிறுநீரக கல்லை சரி செய்யும் சில வழிமுறைகள் :
1.) 9எழுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி நீர் சேர்க்காமல் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
அரைமணி நேரம் எந்த உணவும் உண்ணக்கூடாது. அரை மணி நேரம் கழித்து அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனை ஒன்பது நாட்களுக்கு செய்ய வேண்டும். கல்லின் அளவைப் பொறுத்து கரையும் நட் கள் அதிகரிக்கும்.சிறுநீர் பையில் இருந்தால் நிச்சயம் ஓரிரு நாளில் கரைந்துவிடும்.
2.) சிறுகண் பீளை நிரந்தர தீர்வாகும். இந்தச் செடியின் பூ, இலையில் உள்ள மொத்த ஆற்றலும் இதன் வேரில் அடங்கியுள்ளது. எனவே இதன் வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நன்றாக நசுக்கி100 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு சூடு படுத்தி வடிகட்டி ஆறவைத்து காலையில் வெறும் வைற்றில் குடித்து வரவேண்டும். இதன் பூ இலை ஆகியவற்றை பச்சையாக எடுத்து நன்றாக நசுக்கி சாறு பிழிந்து சிறிதளவு தண்ணீருடன் காலை மாலை என இருவேளை குடித்து வர வேண்டும்.
3.) வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உடையது. எனவே காய் காய்த்த வெட்டக் கூடிய நிலையில் உள்ள மரத்தினை வெட்டிய பிறகு தூர் பகுதியில் வாழை மரத்தின் நடுவில் உள்ள தண்டு பகுதியில் பள்ளம் ஒன்று தோண்ட வேண்டும். அந்தப் பள்ளத்தில் உருவாகும் நீரை சேகரித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
4.) சிறுநீரில் கல் வெளியேறும் போது பயங்கர வலி ஏற்படும். எனவே பயப்பட வேண்டாம்.
5.) நீர்க்கடுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6.) அதிக அளவு மக்னீசியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் இது கல் கரைய உதவும்.
7.) மேலே கூறப்பட்ட முதல் இரண்டு முறைகளில் ஒன்றை குறைந்தது ஏழு நாட்களுக்கு செய்ய வேண்டும் அப்போதுதான் பலன் கிடைக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. தக்காளி மற்றும் தக்காளி சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2. மது ,புகைபிடித்தல் தவிர்க்க வேண்டும்
3. இறைச்சி உணவுகளை குறைந்த அளவு உண்ண வேண்டும்.
4. முட்டை , பால், பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
5. இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் இவை அதிக யூரிக் ஆசிட் ஏற்படுத்தும்.
6. எண்ணையில் பொறித்த உருளைக்கிழங்கு , மீன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்
7. சீனியை உணவில் சேர்க்கக்கூடாது.
8. அதிக oxalate உணவுகளை தவிர்க்க வேண்டும்.
9. கிருமி தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்
Comments
Post a Comment